சுற்றுலாவுக்கு சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த நிலை! தேடும் பணி தீவிரம்
வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றவர்களில் நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (21-03-2023) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று இங்கு நீராட சென்றதாகவும் அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை, காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, காணாமல் போன இளைஞர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஆரம்பித்துள்ளனர்.