மத வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலியான சோகம்
இஸ்ரேலில் மத வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
இஸ்ரேலில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால், அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் வடக்கு பகுதியான மிரோனின் புனித தளத்தில் யூதர்கள் மத நிகழ்வு நடந்தது.
இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டதால், கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலியாகினர், காயமடைந்த பலர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மோசமான இழப்பு. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்து ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
"הדוחק היה חריג, מראות קשים מאוד": תיעוד ראשוני מרגעי האסון בהר מירון@rubih67 pic.twitter.com/MR7UBCVEHN
— כאן חדשות (@kann_news) April 29, 2021