வெளிநாடொன்றில் நிலச்சரிவில் சிக்கி 48 பேருக்கு நேர்ந்த சோகம்!
நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த இடைவிடாத கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
மேலும் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 48- பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மொத்தம் 31- பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு நேபாளத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கிழக்குப் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் காத்மாண்டு வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். மோசமான வானிலை காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.