லாட்டரியில் கிடைத்த 6.6 கோடி; பெண்ணின் நெகிழ்ச்சியான செயல்
லாட்டரியில் கிடைத்த ரூபாய் 6.6 கோடியை உறவினர்கள் நண்பர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு பிரித்துக் கொடுத்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இது தொடர்பில் அந்த பெண் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனது வங்கி கணக்கில் போதுமான அளவு பணம் உள்ளது. அந்த பணமே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் போதும். இவ்வளவு பெரிய தொகையை நான் ஒருவர் மட்டுமே வைத்து அனுபவிப்பது சரியாக தோன்றவில்லை. எனவே தான் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.
அந்த மனசு தான் கடவுள் என்று அந்த பெண்ணை அனைவரும் பாராட்டி வருகின்றனர் லாட்டரி சீட்டில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்தால் தன்னுடைய குடும்பத்தினருக்கு செலவு செய்யும் பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் 6.6 கோடி ரூபாய் பரிசு கிடைத்த பெண் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு கொடுத்துள்ளார்.
இதேவேளை லாட்டரி பணத்திலிருந்து ஒரு ரூபாயைக் கூட அப்பெண் எடுத்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.