கனடாவில் திடீரென உயர்ந்த கொரோனா தொற்று: ஒரே நாளில் இத்தனை பேர் பலியா?
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டதோடு 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 12இலட்சத்து 86ஆயிரத்து 666பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , 24ஆயிரத்து 626பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 80ஆயிரத்து 789பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஆயிரத்து 331பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 11இலட்சத்து 81ஆயிரத்து 251பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.