6 அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரை எதிர்த்தும், எதிர்கட்சியை ஆதரித்து செயல்பட்டதாக 6 அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகம் கட்டுப்பாட்டை மீறி கழக்கத்திற்கு கழங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்திலும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில், கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து, எதிர்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சத்ய பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ - கழக மகளிர் அணி துணைச் செயலாளர்,
பி.பன்னீர்செல்வம் - பண்ருட்டி நகர மன்ற முன்னாள் தலைவர், எம்.பெருமாள் - பண்ருட்டி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர், திரு.மார்ட்டின் லூயிஸ் (எ) பாபு - அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலளார், டி.சௌந்தர் - நெல்லிகுப்பம் நகரக் கிளை செயலளார், ஆர்.ராம்குமார் - தலைவர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவிதத் தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளனர்.