7500 கோடி மோசடி... இந்திய வம்சாவளியினருக்கு அமெரிக்க நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
அமெரிக்காவில் சிகோகோவை தலைமையிடமாக கொண்டு செயற்பட்ட ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியை சேர்ந்த 38 வயதான ரிஷி ஷா, 38 வயதான ஷ்ரதா அகர்வால் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 35 வயதான பிராட்பர்டி ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் 3 பேரும் இணைந்து 1 பில்லியன் டொலர் ( இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,500 கோடி ) மோசடி செய்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ரிஷி ஷாவுக்கு 7 ஆண்டு 6 மாதம் சிறைத் தண்டனையும், ஷ்ரதா அகர்வாலுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பிராட் பர்டிக்கு 2 ஆண்டு 3 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.