றொரன்டோவில் 78 ஆண்டு சாதனை முறியடிப்பு
றொரன்டோவில் 78 ஆண்டுகளாக காணப்பட்ட சாதனையொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலத்தின் பின்னர் றொரன்டோவில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
1944ம் ஆண்டு றொரன்டோவில் 31.1 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியிருந்தது, இதுவே அதி கூடிய வெப்பநிலையாக காணப்பட்டது.
இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் றொரன்டோவின் வெப்பநிலை 32.1 பாகை செல்சியஸாக காணப்பட்டது எனவும் கனேடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பநிலையுடனான காலநிலை தொடர்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்பட்ட நோயுடையவர்கள், சிறுவர்கள், சிசுக்கள், வயது முதிர்ந்தவர்கள் போன்றவர்கள் இந்த கூடுதல் வெப்பநிலையுடனான காலநிலை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.