பிரித்தானியாவில் 82 வயது மூதாட்டி மரணம்; இரு சிறுவர்கள் கைது!
பிரித்தானியாவில் 82 வயதான மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில், 14, 15 வயது சிறுவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சபோல்க் (Suffolk) என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் ஜாய் மிடில்டிச் என்ற 82 வயது மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில், குறித்த மூதாட்டியின் வீட்டினுள் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முகமூடி அணிந்த மர்ம நபர்கள்
அப்போது தாக்குதலுக்கு உள்ளான ஜாய் மிடில்டிச், படுகாயமடைந்ததால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
எனினும் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், சந்தேகத்தின் பேரில் லோஸ்டாப்ட் (Lowestoft) பகுதியைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் விசாரணைக்காக மார்ட்லெஷாம் பொலிஸ் புலனாய்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவு கூறப்படுகின்றது.