பாரிஸ் நகரில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
பாரிஸ் நகரில் 12 வயது சிறுமியை பிளாஸ்டிக் பெட்டி ஒன்றுக்குள் தூக்கி எறியப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரான்சில் எழுந்துள்ள துக்கமும் சீற்றமும் சந்தேக நபரின் புலம்பெயர்ந்த நிலை குறித்த அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 12 வயதான லோலாவின் உடல் அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே உள்ள முற்றத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய பெண் ஒருவர் கொலை, கற்பழிப்பு மற்றும் சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் பிரான்சை விட்டு வெளியேறும் உத்தரவின் கீழ் அல்ஜீரிய குடியேறியவர் என்பதும் வெளிப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்(Emmanuel Macron) கொலையுண்ட சிறுமியின் பெற்றோரை செவ்வாயன்று சந்தித்து தனது முழு ஆதரவை உறுதியளித்த சிறிது நேரத்திலேயே, வலது மற்றும் தீவிர வலதுசாரி அரசியல் எதிரிகள் அரசாங்கம் தோல்வியுற்றதாக குற்றம் சாட்டினர்.
தேசிய சட்டமன்றத்தில் ஒரு அமர்வின் போது, தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சியின் மரைன் லு பென் அரசாங்கத்தின் தளர்வான இடம்பெயர்வு கொள்கையை கண்டித்தார்.
இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் சந்தேகப்படும் நபர் நம் நாட்டில் இருந்திருக்கக் கூடாது, இந்த கட்டுப்பாடற்ற, இரகசியக் குடியேற்றத்தை இறுதியாக நிறுத்துவதில் இருந்து உங்களைத் தடுப்பது எது? அவர் கேள்வியெழுப்பினார்.
பிரதம மந்திரி எலிசபெத் போர்ன் (Elizabeth Bourne)அவரிம் கொஞ்சம் கண்ணியம் காட்டுங்கள் என்றும் பெற்றோரின் வலி மற்றும் லோலாவின் நினைவை மதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
காவல்துறையும் நீதித்துறையும் தங்கள் வேலையைச் செய்யட்டும். என அவர் வலியுறுத்தினார். வடகிழக்கு பாரிஸின் 19வது மாவட்டத்தில் உள்ள பாடசாலையில் இருந்து வீட்டிற்குச் செல்லாத லோலா கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனார்.
மாலையில் அவளது உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில், சிறுமியின் கழுத்தில் பெரிய அளவில் காயம் இருந்துள்ளது என்றும் சிறுமி லோலா மூச்சு திணற செய்ததில் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 24 வயதான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேகநபர், வீடற்றவர் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர் திங்களன்று கைது செய்யப்பட்டதுடன், கொலை, கற்பழிப்பு மற்றும் சித்திரவதைச் செயல்களின் குற்றச்சாட்டுகளில் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.