பேர்ஸை இழந்தவருக்கு திருடன் அனுப்பிய கடிதம்; வியப்பில் ஆழ்ந்த பலர்!(Photos)
இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு சமூகவலைத்தளங்களில் வெளியான தகவல் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பேர்ஸை இழந்தவருக்கு நபருக்கு திருடன் அனுப்பிய கடிதமே மக்களின் வியக்கவைத்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில் பயணி ஒருவரின் பேர்ஸை ஒருவர் கொள்ளையிட்டுள்ளார்.
வியக்கவைத்த கடிதம்
இந்நிலையில் பேர்ஸை இழந்த நபருக்கு கொள்ளையரிடமிருந்து கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. அதில் குறிப்பு ஒன்றும் எழுதி வைத்துள்ளார். அந்த குறிப்பில் ,
“உங்களை கடவுள் ஆசி வழங்கியுள்ளார். எனக்கு ஒரு பணத்தேவை இருந்தது. அதனால்தான் பணத்தை எடுத்தேன். இல்லை என்றால் பணத்தையும் திருப்பி அனுப்பியிருப்பேன்.
இந்த நேரத்தில் அது பெரிய உதவியாக இருந்தது. அத்துடன் உங்கள் பேர்ஸ் மிகவும் பழையதாக இருந்தது. புதிதாக ஒன்று வாங்குங்கள். இல்லை என்றால் இந்த கடிதத்துடன் அதனையும் அனுப்பி வைத்திருப்பேன். நீங்கள் ஒரு தானம் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருடனிடமிருந்து கிடைத்த கடிதம் மற்றும் தனது ஆவணங்களை பேர்ஸின் உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் திருடனின் செயல் பலரையும் வியக்கவைத்துள்ளது.
ஏனெனில் தேசிய அடையாள அட்டை என்பது இலங்கையர்களின் மிகமிக அத்தியாவசியமான ஆவணம் ஆகும். தொலஒத்துவிட்டால் அதனை மீளப்பெறுவது என்பது மிகவும் கடினமான காரியம் ஆகும்.