மனைவியுடன் ஆனந்தமாக குளியல் போட்ட அமெரிக்கருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் ஆனந்தமாக மனைவியுன் குளியல் போட்ட நபரை ஒரு மலைச்சிங்கம் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கொலராடோ பூங்கா, வனவிலங்குப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளானவர் தம் மனைவியுடன் குளியல் தொட்டியில் இருந்தபோது மலைச்சிங்கம் அவரைத் தாக்கியதாகக் கூறப்பட்டது.
குளித்துகொண்டிருக்கையில் ஏதோ ஒன்று தலையைப் பிடித்து இழுத்ததைப் போல் உணர்ந்ததாகச் பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
அலறியடித்த கணவன் மனைவி
இதனையடுத்து கணவன் , மனைவி பயத்தில் அலறியடித்து கத்திக்கொண்டே விலங்கின் மீது தண்ணீர் தெளித்தனர்.
இந்நிலையில் அருகிலிருந்த flashlight ஒளிச்சாதனத்தை எடுத்து மனைவி. அந்த விலங்கின் மீது வெளிச்சம் பாய்ச்சியபோதே அது ஒரு மலைச்சிங்கம் என்பது தெரிந்தது.
இதனையடுத்து தம்பதி மலைச்சிங்கத்தைப் அங்கிருந்து விரட்டியதாகவும், பாதிக்கப்பட்ட ஆடவருக்கு இலேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
மனைவியுடன் ஆனந்தமாக குளியல் போட்ட நபரை மலைச்சிங்கம் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.