ஆண்டுக்கு ரூ.75 கோடி சம்பளம் பெற்ற நபர் துறவியானார்
இந்தியாவில் ஆண்டுக்கு 75 கோடி ரூபா சம்பளம் பெற்ற மூத்த அதிகாரி பிரகாஷ் ஷா (Prakash Shah) துறவியாகியுள்ளார்.
பிரகாஷ் ஷா (Prakash Shah) இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின்(Mukesh Ambani) வலது கரமாகத் திகழ்ந்தவர். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் திட்டப் பிரிவு துணைத் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட உடனேயே ஆடம்பர வாழ்க்கையைத் துறந்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி வெள்ளை ஆடை உடுத்தி துறவிக்கான தீட்சையை பெற்ற இவருடன் மனைவி நைனா ஷாவும் (Naina Shah) துறவறம் பூண்டுள்ளார். ஓய்வுபெறும்போது இவரது ஆண்டு சம்பளம் 75 கோடி ரூபாவாக இருந்துள்ளது.
Prakash Shah கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் பிடெக் மற்றும் எம்டெக் பட்டம் பெற்றவர். மும்பையில் ஐஐடி பட்டம் பெற்றுள்ளார்.
இதேவேளை இவரது இளையமகன் 7 ஆண்டுகளுக்கு முன்பே தனது 24 ஆவது வயதில் துறவியானதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.