லண்டனில் ஆபத்தான நபராக ஒருவர் அறிவிப்பு... வெளியான புகைப்படம்
பிரித்தானிய தலைநகர் லண்டனில் முதியவர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டதை விசாரிக்கும் துப்பறிவாளர்கள் கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒருவர் அந்த இடத்தில் இருந்து ஓடுவதைக் காட்டும் படங்களை வெளியிட்டுள்ளனர்.
87 வயதான தாமஸ் ஓஹலோரன், கடந்த செவ்வாய்க்கிழமை 4 மணிக்கு பிறகு தாக்கப்பட்ட பின்னர், மேற்கு லண்டனில் உள்ள கிரீன்ஃபோர்ட், கெய்டன் சாலையில் உயிரிழந்துள்ளார்.
சி.சி.ரிவியில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை கொண்டு அவசரமாக அந்த நபரை அடையாளம் காண காவல்துறை இப்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
அவர் சாம்பல் நிற ஷார்ட்ஸ், அடர் நிற டி-ஷர்ட், வெள்ளை பேஸ்பால் தொப்பி மற்றும் வெள்ளை வடிவ பில்டர் பாணி கையுறைகளை அணிந்திருப்பதாக விவரிக்கப்படுகிறது.
அவர் ஆபத்தான நபர், மக்கள் அவரை அணுக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆனால் அவரைத் தெரிந்தால் அல்லது அவர் இருக்கும் இடம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் உடனடியாக எங்களை 999 இல் அழைக்குமாறு விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.