கனடாவில், நிறுவன தொடர்பாடலை கண்டு கொள்ளத் தேவையில்லை என சட்டம்?
கனாடவின் மாகாணமொன்றில் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்படும் மின்னஞ்சல்கள் உள்ளிட்ட தொடர்பாடல்களுக்கு பணியாளர்கள் பதிலளிக்க வேண்டியதில்லை என்ற சட்டம் நடைமுறைக்கு வருகின்றது.
பணி நேரம் தவிர்த்து ஏனைய நேரங்களில் பணியாளர்களுக்கு நிறுவனம் அனுப்பும் தகவல்களுக்கு உடன் பதிலளிக்க வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த நூதன சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பணி நேரம் தவிர்ந்த நேரங்களில் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்படும் மின்னஞ்சல்கள், குறுஞ் செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புக்களை தவிர்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பினை துண்டித்துக் கொள்வதற்கான உரிமை என இந்த சட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு இந்தச் சட்டம் மாகாண அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கனடாவின் வேறு எந்தவொரு மாகாணத்திலும் இவ்வாறு தொழிலாளர்களுக்கு சாதகமான அடிப்படையிலான இந்த சட்டம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பினை துண்டித்துக் கொள்ளும் உரிமை என்பதன் மூலம் அலுவலக அல்லது தொழில்முறை ரீதியான தொடர்பாடல்களை உதாசீனம் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடைநிலை ஊழியர்கள் முதல், முகாமையாளர்கள், நிறைவேற்று அதிகாரிகள் வரையில் இந்த சட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
25க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களிலும் இந்த சட்டம் எதிர்வரும் 2023ம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.