அமெரிக்காவில் பொலிஸ் கார் மீது மோதிய ரயில்! 2பெண் கைதிக்கு நேர்ந்த துயரம்
கைவிலங்கிடப்பட்ட யுவதி ஒருவர் அமர்ந்திருந்த பொலிஸ் காரின் மீது ரயில் ஒன்று மோதிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கொலராடோ மாநிலத்தின் போர்ட் லுப்டன் நகரில் வீதியொன்றில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக, 20 வயதான யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்து, பொலிஸ் கார் ஒன்றின் பின் ஆசனத்தில் வைத்திருந்தனர்.
அக்கார் ரயில் கடவையில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. சந்தேகத்துக்கிடமான வாகனமொன்றை பொலிஸார் சோதனையிட்டுக் கொண்டிருக்கும்போது வேகமாக வந்த லொறி ஒன்று பொலிஸ் காரை மோதிச் சென்றது.
ரேனி ரியோஸ் கொன்ஸாலெஸ் எனும் மேற்படி யுவதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரக்கு ரயில் ஒன்றே மேற்படி கார் மீது மோதியுள்ளது.
மேற்படி கார் ரயில் பாதையில் ஏன் நிறுத்தப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இச்சம்பவத்தையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தின் பிரதி ஷெரீப் அதிகாரி எட் ஒபேஷி இது தொடர்பாக கூறுகையில், ‘ஒருவரை கைது செய்தால், உங்கள் கட்டுப்பாட்டில் நபர்களை வைத்திருந்தால், அவர்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தினால் அவர்களின் பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பு எனக் கூறியுள்ளார்.