செல்லப்பிராணியால் ஏற்பட்ட விபரீதம்; பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பிரான்ஸில் வளர்ப்பு பூனை ஒன்றை பிடிக்க முற்பட்ட சிறுவன் ஒருவர் 10 ஆவது தளத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் லில் மாவட்டத்திற்குட்பட்ட H)ஓ(B) பூர்தன் (Haubourdin- Lille) நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்குள்ள கட்டிடம் ஒன்றின் 10 ஆவது தளத்தில் தனது பெற்றோர்களுடன் வசிக்கும் 3 வயது சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தனது வளர்ப்பு பூனையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது, பூனை ஜன்னல் வழியாக வெளியேறியுள்ளது. பூனையை பிடிக்க முற்பட்ட சிறுவன், ஜன்னல் வழியாக ஏறியுள்ளார்.
பின்னர் எதிர்பார்க்காத நிலையில், அங்கிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என பெற்றோர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த பலர் தீயணைப்பு படையினரை அழைத்துள்ளனர். சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது பெற்றோர்கள் வீட்டில் இருந்தபோதும், அவர்கள் அவதானிக்காத போது மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் தனது பெற்றோர்களுடன் சில நாட்களுக்கு முன்னரே குறித்த வீட்டுக்கு வசிக்க வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பெற்றோர்களின் கவனயீனத்தாலே இவ்வறான சம்பவங்கள் இடம்பெறுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் கூறியுள்ளனர்.