வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த நபருக்கு யாழில் நேர்ந்த துயரம் சம்பவம்!
யாழில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து நாடு திருப்பிய இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்து சம்பவம் யாழ்.சாவகச்சேரி - மரத்தடி பகுதியில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்து சங்கத்தானையை சேர்ந்த 24 வயதான நிரோஷ் எனபவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது, டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்நேற்று (15) அதிகாலை இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.