கனடாவில் மருத்துவரை கொடூரமாக கொன்ற நபர்: விசாரணைக்கு முன் நடந்த திருப்பம்
ஆல்பர்ட்டா மாகாணத்தில் மருத்துவரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நபர் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆல்பர்ட்டாவின் Red Deer பகுதியில் அமைந்துள்ள சுகாதார மையத்தில் பணியில் இருந்த மருத்துவர் Walter Reynolds என்பவரை கடந்த ஆண்டு 54 வயதான Deng Mabiour கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் Deng Mabiour மீது படுகொலை வழக்கு பதியப்பட்டிருந்தது. எதிர்வரும் 22ம் திகதி முதல் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், Deng Mabiour சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்கரி மருத்துவமனையில் Deng Mabiour மரணமடைந்துள்ளதை உரிய அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். ஆனால் அவர் மரணமடைந்ததன் காரணம் தொடர்பில் உறுதி செய்யப்படவில்லை எனவும், புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்து வந்ததகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட மருத்துவர் Walter Reynolds(45) ஆப்ரிக்கா நாட்டவர். 2020 ஆகஸ்ட் மாதம் சம்பவத்தன்று ஆயுதத்துடன் சுகாதார மையம் சென்ற Deng Mabiour மருத்துவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மருத்துவர், பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சம்பவம் நடந்தபோது மருத்துவமனையில் இருந்த பெண் ஒருவர் அளித்த சாட்சியத்தில், திடீரென்று அலறல் சத்தம் கேட்டதாகவும், தாம் சென்று பார்த்தபோது, ஒருவர் சுத்தியல் மற்றும் வாளுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட மருத்துவரும் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டவரும் ஏற்கனவே அறிமுகமாகவர்கள் என்றே விசாரணையில் தெரிய வந்தது.