எம்.ஜி.ஆரின் வாரிசு நடிகர் அஜித்? போஸ்டரால் பரபரப்பு!
தமிழகத்தின் மதுரையில் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிகப்படுகின்றது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று முடிவடைந்த நிலையில் நாளை அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவர்கள் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்த நிலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வாரிசு யார் என்ற விவாதம் எழுந்தது. அதில் நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னை எம்ஜிஆர் வாரிசுக்கு தகுதியானவர் என கூறியதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
இதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாள் நாளை மே முதலாம் திகதியன்று கொண்டாட உள்ளதால் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பல்வேறு விதத்தில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
அந்தவகையில் மதுரையில் எங்களின் பொன்மனச்செம்மலே என்ற வாசகம் அடங்கிய போஸ்டரில் நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் படத்தை எம்ஜிஆர் போன்று சித்தரிக்கப்பட்டு ஒட்டியுள்ள போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.