இளம் வயது கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்கள் கொலை: ரொறன்ரோ நபருக்கு கிடைக்கவிருக்கும் தண்டனை
இளம் வயது கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்களை கொன்று உடல்களை துண்டாக சிதைத்த நபர் தொடர்பில் தண்டனை தீர்ப்பு விசாரணை இன்று துவங்க உள்ளது.
ரொறன்ரோவை சேர்ந்த 47 வயது ஆதம் ஸ்ட்ராங் என்பவர் Rori Hache மற்றும் Kandis Fitzpatrick ஆகியோர் கொலை வழக்கில் மார்ச் மாதம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
கர்ப்பிணியாக இருந்த Rori Hache தனது 18 வயதில், 2017 ஆகஸ்டு மாதம் மாயமானார். ஆனால் 2008ல் Kandis Fitzpatrick மாயமாகியிருந்தார்.
Rori Hache மாயமானதன் ஒரு மாதத்திற்கு பிறகு ஒன்றாரியோ ஏரியில் அவரது சிதைந்த உடல் மீட்கப்பட்டது. அதுவரையில் பொலிசாரின் விசாரணையில் ஆதம் ஸ்ட்ராங் இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் குடியிருந்த கட்டிடத்தில் கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்படவே, அதில் இருந்து மனித மாமிசம் போன்ற கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2018 வரை Kandis Fitzpatrick உடல் கண்டெடுக்கப்படவில்லை என்றாலும், ஆதம் ஸ்ட்ராங் குடியிருந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் டி.என்.ஏ மாதிரிகளும் வேட்டைக்கு பயன்படுத்தும் கத்தியும் பொலிசார் மீட்டுள்ளனர்.
நீதிமன்ற விசாரணையில் அந்த இரு பெண்களையும் கொன்று உடல் சிதைத்ததாக ஆதம் ஸ்ட்ராங் ஒப்புக்கொண்டாலும், பொலிசாரால் அதை உறுதிபட நிரூபிக்க முடியவில்லை.
இந்த வழக்கில் மிக விரைவில் தண்டனை தீர்ப்பு வழங்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.