ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வான்வழி தாக்குதலில் 60 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தலிபான்கள் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசுக்கு எதிராக தலிபான்கள் தீவிர தாக்குதலை தொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் பால்க் மாகாணத்தில் திஹ்தாதி மாவட்டத்தில் அந்நாட்டு விமான படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர்.
இதில், 60 தலிபான்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஆப்கானிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்து உள்ளது.
இதுதவிர, 40 மோட்டார் சைக்கிள்கள், தலிபான்களின் ஆயுத குவியல்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவையும் அழிக்கப்பட்டு உள்ளன.