ஆப்கானிஸ்தான் அதிபர் தப்பிச்சென்றபோது என்னவெல்லாம் கையோடு எடுத்துச்சென்றார் தெரியுமா...
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, 4 கார்கள், ஹெலிகாப்டர் முழுவதும் பணத்துடன் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமையே காபூலை விட்டு அஷ்ரப் கனி வெளியேறினார்.
தஜிகிஸ்தான் சென்ற அவருக்கு அங்கு தஞ்சமடைய அனுமதி வழங்கப்படததால், ஓமன் சென்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனிடையே அஷ்ரப் கனி காபூலில் இருந்து செல்லும் போது 4 கார்கள், ஒரு ஹெலிகாப்டர் முழுவதும் பணத்தை கொண்டு சென்றதை பார்த்ததாக ரஷ்ய தூதரக செய்தி தொடர்பாளர் நிகிடா தெரிவித்துள்ளார்.
நிரப்ப முடியாமல் பணத்தில் சிலவற்றை சாலையிலேயே விட்டுச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.