ஆப்கானிஸ்தான் மக்கள் குறித்து கருத்து வெளியிட்ட பிரான்ஸ் மந்திரி
ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க ராணுவ வீரர் புறப்பட்டதும், காபூல் விமான நிலையத்தை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற மக்களுக்கு வாய்ப்புள்ளது: பிரான்ஸ் மந்திரி சொல்கிறார் பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன்- வே லெ டிரியன். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆகஸ்ட் 31-ந்தேதிக்குள் வெளியேறுவார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததும், தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன் ஆட்சி அதிகாரத்தை பிடித்தனர். அடுத்த மூன்று மாதங்களுக்குள் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க உளவுத்துறை கூறிய நிலையில், மூன்று நாட்களிலேயே அதிகாரத்தை கைப்பற்றியதால் வெளிநாட்டினர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா ராணுவ வீரர்கள், காபூல் சர்வதேச விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்றத் தொடங்கினர்.
வெளியேறுதல் பணி 31-ந்தேதிக்குள் முடிவடையும். அன்றைய தினத்துடன் அமெரிக்க ராணுவ வீரர்கள் முற்றிலுமாக வெளியேறிவிடுவார்கள் என அமெரிக்க உறுதிப்பட கூறியது. ஆனால், அமெரிக்காவின் அனைத்து ராணுவ வீரர்களும் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு வெளியேறினர். அமெரிக்காவின் கடைசி வீரர் வெளியேறியதும் தாலிபான் வீரர்கள் காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்புபவர்கள் இனிமேல் வெளியேற முடியுமா? என்ற கேள்வி எழுந்தள்ளது.
ஆனால், பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன்- வே லெ டிரியன் ‘‘காபூல் விமான நிலையத்தின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து தலிபான்கள் கத்தார் மற்றும் துருக்கி உடன் பேச்சுவார்ததை நடத்தியுள்ளனர். ஆகவே, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் நபர்கள் வணிக ரீதியிலான விமானங்களை பயன்படுத்த முடியும்’’ என்றார்.