பற்றியெரிந்த குடியிருப்பு: மருத்துவமனையில் நான்கு குழந்தைகள்
மிசிசாகா பகுதியில் குடியிருப்பொன்று தீ விபத்தில் சிக்கியதில் நான்கு சிறுவர்கள் உட்பட 7 மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
மிசிசாகா பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சுமார் 7.30 மணியளவில் சம்பவப்பகுதிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அங்கிருந்து 12 பேர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர்.
இதில் கரும் புகையால் பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர்கள் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு ஆபத்தில்லை எனவும், முதலுதவிக்கு பின்னர் திருப்பி அனுப்பப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் விச்சாரணைக்கு பின்னர் தெரியவரும் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பில் சில குடும்பங்கள் வசித்து வருவதாகவும், சம்பவத்தின் போது அதில் பெரும்பாலானவர்கள் அந்த குடியிருப்பில் இல்லை என்றே கூறப்படுகிறது.