தடுப்பூசி கலப்பு... தாயாரின் இறுதிச்சடங்கை தவறவிட்டு கதறிய ஒன்ராறியோ நபர்
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் தாயாரின் இறுதிச்சடங்குகளுக்காக சென்ற ஒன்ராறியோ நபர், தடுப்பூசி காரணங்களால் திருப்பி அனுப்பபட்ட சம்பவம் அவரை கலங்கடித்துள்ளது.
ஒன்ராறியோவில் வசிக்கும் Alan Preddie என்பவர் தமது தாயார் இறந்ததாக தகவல் கிடைத்த நிலையில், மனைவி மற்றும் சில உறவினர்களுடன் சொந்த நாடான டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு வியாழக்கிழமை பயணப்பட்டுள்ளார்.
ஆனால், இரண்டு தடுப்பூசிகள் கலந்து போட்டுக்கொண்டதால் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது எனவும், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான செலவாக 3,000 டொலர் வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். ஆனால் இவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தடுப்பூசியால் சிக்கல் இல்லை என்பதால் அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி தற்போதைய சூழலில் அவரால் 3,000 டொலர் செலவிட முடியாது என்பதால் Alan Preddie மட்டும் அடுத்த கனேடிய விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தம்மை மொத்தமாக உலுக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள Alan Preddie, தாம் அரசாங்கத்தையும் அவர்கள் முன்வைத்த அறிவியலையும் நம்பியதாகவும், ஆனால் தமது தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது என்றார்.
பல நாடுகளும் தற்போது இருவேறு தடுப்பூசிகள் கலந்து போட்டுக்கொண்டுள்ளதை ஏற்க மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.