மூன்று ஆயுள் தண்டனை பெற்ற கனேடியர்: ஆத்திரத்தால் வந்த வினை
கனடாவில் பிரிந்து சென்ற காதலியையும் அவரது இரு இளம் வயது பிள்ளைகளையும் கொடூரமாக கொலை செய்த நபருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மட்டுமின்றி, குறித்த நபருக்கு 25 ஆண்டுகள் பரோலுக்கு வாய்ப்பில்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2018ல் ஒன்ராறியோவின் அஜாக்ஸ் பகுதியில் 39 வயதான Krassimira Pejcinovski என்பவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார் கோரி ஃபென் என்பவர்.
தம்முடனான உறவை முறித்துக்கொண்ட ஆத்திரத்தில் Krassimira Pejcinovski என்பவரை கொலை செய்ததுடன், அவரது 15 வயது மகனையும் கொன்றுள்ளார். மட்டுமின்றி, ஐந்து மணி நேரம் காத்திருந்து கிராசிமிராவின் 13 வயது மகளையும் கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் கைதான கோரி ஃபின் குற்றவாளி என நிரூபணமான நிலையில், ஒவ்வொரு குற்றத்திற்கும் குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையும் 10 ஆண்டுகள் வரையில் பரோல் மறுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், அரசு தரப்பு முன்வைத்த வாதத்தில் சிறார்களை கொன்ற குற்றத்திற்கு தலா 25 ஆண்டுகள் தண்டனையும் கிராசிமிராவை கொலை செய்த குற்றத்திற்காக 22 ஆண்டுக தண்டனையும் மொத்தம் 72 ஆண்டுகளுக்கு பரோல் மறுக்கவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 25 ஆண்டுகள் பரோல் மறுப்பும் விதித்துள்ளனர்.
இருப்பினும், ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமா அல்லது தனித்தனியாகவா என்பது தொடர்பில் முக்கிய தீர்ப்புக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.