தாயாரை காப்பாற்ற தந்தையின் சடலத்தை மறைவு செய்த மகன்
ஆல்பர்ட்டாவில் தாயாரால் கொல்லப்பட்ட தந்தையின் சடலத்தை மறைவு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இளைஞர் முதன் முறையாக நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2011ல் Miles Naslund என்பவர் தனது மனைவியால் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்தார். சம்பவத்தன்று மது போதையில் இருந்த Miles Naslund, மனைவியை கேவலமாக திட்டியதுடன், சமைத்து வைத்திருந்த உணவுகளை மேஜையின் மீதிருந்து தரையில் கொட்டியுள்ளார்.
ஏற்கனவே, கணவரால் நாளும் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாகி வந்த அவர், சம்பவத்தன்று அதிக மது போதையில் இருந்த கணவனை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
இந்த சம்பவம் அனைத்தும் நேரிடையாக காண நேர்ந்த Neil Naslund தமது தாயாருக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், தந்தையின் சடலத்தை ரகசியமாக மறைவு செய்யவும் உதவியுள்ளார்.
நீண்ட 6 வருடங்கள் கடந்த நிலையில், நீலின் சகோதரர்கள் தந்தை மாயமானது தொடர்பில் விசாரிக்க தொடங்க, கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தாயாரும் மகனும் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டனர். நீலுக்கு 3 ஆண்டுகள் சிறையும், கொலை செய்த தாயாருக்கு 18 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டது.
தந்தை இறந்த அந்த முதல் 6 ஆண்டுகள் மட்டுமே தமது தாயார் நிம்மதியாக தூங்கினார் என கூறும் நீல், அதன் பின்னர் தான் தமது அன்றாட வாழ்க்கையை அவர் அனுபவிக்க தொடங்கினார் எனவும் நீல் தெரிவித்துள்ளார்.
கைதாகும் முன்னர் அந்த ஆறு ஆண்டுகளில் தாம் திருமணம் செய்து கொண்டதாகவும், தாயாரின் முகத்தின் நிம்மதியை காண முடிந்தது எனவும் நீல் குறிப்பிட்டுள்ளார்.
பலமுறை தமது தாயார் விவாகரத்துக்கு முயன்றதாகவும், ஆனால் தந்தையின் கொடும் சித்திரவதையில் அந்த பேச்சு முடிவுக்கு வந்ததாகவே நீல் தெரிவித்துள்ளார்.
தற்போது பரோலில் வெளியாகியுள்ள நீல் தமது வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.