நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
அமெரிக்காவில், அலெஜியன்ட் ஏர்லைன்ஸ் விமானம் (எண்: 227) ஒன்று, திடீரென குலுங்கியதால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். கடந்த இரண்டு நாடுகளுக்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவத்தின்போது விமானத்தில் 179 பயணிகளும் 6 பணியாளர்களும் இருந்தனர்.
அவர்களில் 4 பேர் காயமடைந்தனர். ஆனால் அந்த விமான நிறுவனம், விமானம் எந்த தடையுமின்றி ஓடுதளத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அச்சத்தில் உறைந்த பயணிகள்
காயம்பட்டவர்களுக்கு விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவ பணியாளர்கள் சிகிச்சையளித்ததுடன், இரண்டு பயணிகள் மற்றும் இரண்டு விமான பணிப்பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் விமானத்தில் பயணித்த லிசா ஸ்பிரிக்ஸ் எனும் பெண்மணி கூறுகையில்,
இந்த அனுபவம் பயங்கரமானதாக இருந்தது. திரைப்படங்களின் காட்சிபோல் இருந்தது. விமானம் பாதி தூரத்திற்கு மேல் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு வலிமையான ஏற்ற இறக்கமும், 'குலுக்கலும்' ஏற்பட்டது, எங்கள் பக்கத்திலிருந்த பணிப்பெண் 'மேட்ரிக்ஸ்' படத்தில் வருவதுபோல் காற்றில் பறந்து, ஒரு அரை வினாடிக்கு பின் தரையில் விழுந்தார். அவரது கணுக்கால் உடைந்ததாக அவர் கூறினார்.
மற்றொரு பயணி கூறுகையில்,
"இந்த சம்பவத்தின்போது ஒரு பெண் ரெஸ்ட் ரூம் சென்றிருந்தார். அவர் வெளியே வந்து எனக்கு பின்னால் அமர்ந்தார். அவருடைய வலது புருவத்தில் ஒரு பெரிய காயம் காணப்பட்டு அதிலிருந்து ரத்தம் வெளியேறியது" என கூறினார்.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஆகிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இது தொடர்பில் விசாரித்து வருவதாக அலெஜியன்ட் ஏர்லைன்ஸ் தெரிவித்து உள்ளது.
எனினும் , தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். இன்னும் விசாரணையை தொடங்கவில்லை என தெரிவித்துள்ளது.