உக்ரைனுக்கு மீண்டும் உதவும் அமெரிக்கா: ஜோ பைடன் அறிவிப்பு
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக தனது நாட்டு ராணுவ வீரர்களுக்கு அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் அந்நகரைக் கைப்பற்ற வேண்டும் என ராணுவத்தினருக்கு அதிபர் புதின் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை ரஷ்யா ராணுவம் கைப்பற்றியது. ரஷ்ய துருப்புக்களை கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.
உக்ரைன் அரசாங்கத்திற்கு 800 மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக வழங்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.