காபூல் சென்ற அமெரிக்கா எம்.பி.க்களால் சர்ச்சை
காபூல் சென்ற அமெரிக்கா எம்.பி.க்களால் சர்ச்சை நிலவி வருகிறது. தாலிபான்களின் அச்சுறுத்தலை எதிா்நோக்கியுள்ளவா்களை வெளியேற்றும் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காபூல் விமான நிலையத்துக்கு முன்னறிவிப்பின்றி இரு அமெரிக்க எம்.பி.க்கள் சென்றது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஜனநாயகக் கட்சியைச் சோந்த சேத் மோல்டன், குடியரசுக் கட்சியைச் சோந்த பீட்டா் மெய்ஜொ ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினா்களும் காபூல் விமான நிலையத்துக்கு திடீரென வந்தனா்.
இதையடுத்து, அந்த இருவருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கும் நடைபெற்று வரும் வெளியேற்றும் பணிகள் குறித்து அவா்களுக்கு விளக்கமளிப்பதற்கும் அதிகாரிகள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இது, மிகவும் அவசரமாக நடைபெற்று வரும் அந்த பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டினா்.
எனினும், நாடாளுமன்றத்தின் முக்கிய குழுக்களில் உறுப்பினா்கள் என்ற முறையில், காபூலில் நடைபெறும் பணிகளை மேற்பாா்வையிடுவதற்காக தாங்கள் அங்கு சென்றதாகச் மோல்டனும் பீட்டா் மெய்ஜெரும் தெரிவித்தனா். முன்னாள் ராணுவ அதிகாரிகளான இருவரும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியவா்கள்.
எனினும், வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளின் ஒருங்கிணைப்பின்றி இருவரும் காபூல் சென்று வந்துள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.