அமெரிக்க சிறுவனுக்கு 100 ஆண்டு சிறை...எதற்காக தெரியுமா?
தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த இரு குழந்தைகளை கொன்ற சிறுவனுக்கு அமெரிக்க நீதிமன்றம் 100 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
இண்டியானாபோலிஸ் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் நிக்கோலஸ் கெட்ரோவிட்ஸ். அவரது தந்தையின் இரண்டாவது திருமணத்தில் மகள்கள் மற்றும் மகன்கள் பிறந்தனர். இதில், 2 வயது சிறுமி, 2017 மே மாதம், வீட்டில் மூச்சு திணறி இறந்தார்.
பின், 2017 ஜூலையில், 11 மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறி இறந்தது.
இரு குழந்தைகளையும் அவர்களது சகோதரர் நிக்கோலஸ் கொன்றது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து நிக்கோலஸ் அடுத்ததாக 2018 இல் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சமயத்தில் அவருக்கு வயது 13. மாவட்ட நீதிமன்ற விசாரணையில் நிக்கோலஸ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து 17 வயது நிக்கோலஸ் என்பவருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.