சிறுவனைக் காக்க மலைசிங்கத்தை அசால்ட்டாக கையாலையே அடித்து விரட்டிய தாய்
அமெரிக்காவில் அமைந்துள்ளது கலிபோர்னியா மாகாணம். இங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சாண்டா மோனிகா மலைப் பகுதி அமையப்பெற்றுள்ளது.
இதில் கலாபசஸ் எனுமிடத்தில் தமது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் ஒருவனை மலைச் சிங்கம் திடீரெனத் தாக்கியது.
கதறக் கதற அந்தச் சிறுவனைப் பிடித்து புல்வெளியில் தரதரவென்று இழுத்துச் சென்றது.
சிறுவனுடைய அலறல் சத்தம் கேட்டு வெளியில் ஓடிவந்த தாய் அந்த மலைச் சிங்கத்தை அடிக்க ஓடினார்.
அந்தச் சிங்கம் குழந்தையைத் அதன் பிடியிலிருந்து விடும் வரை வெறும் கையாலேயே அதை அடித்து துவம்சம் செய்தார். ஒரு கட்டத்தில் சிங்கம் குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிட்டது. உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த மலை சிங்கத்தை சுட்டுக் கொன்றனர். சிங்கம் தாக்கியதால் தலை மற்றும் உடல் பகுதிகளில் காயமடைந்த அந்தச் சிறுவனை லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகனை காப்பாற்ற வெறும் கையாலேயே சிங்கத்தை அடித்து விரட்டிய தாயின் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.