ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபை விடுத்த அறிவிப்பு
ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபை 2021- 2022 கல்வியாண்டில், இடைநிலைப் பாடசாலை மாணவர்களுக்கு, காலாண்டு முறையை மீண்டும் அமுலுக்கு கொண்டு வரவுள்ளது.
இதன்படி மாணவர்கள், நான்கு வெவ்வேறு காலாண்டுகளின் இரண்டு கற்கைநெறிகளை, ஒரே நேரத்தில் கீழ் பயிலுவர். ஒரே நேரத்தில் நான்கு வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்ற, அரையாண்டு முறைக்கு பதிலீடாக இந்த காலாண்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அனைத்து பாடசாலை சபைகளையும். ஒரு கால அட்டவணையை பின்பற்றுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ள நிலையில், தாங்கள் காலாண்டு முறையை தெரிவு செய்துள்ளதாக, ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபை தெரிவித்துள்ளது.