அதிபர் புடின் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு!
ரஷ்யாவின் பிரபல விஞ்ஞானி ஒருவர், தேசத்துரோகி என கைது செய்யப்பட்ட இரண்டாவது நாளில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் பிரபல விஞ்ஞானிகளில் ஒருவரான 54 வயது டிமிட்ரி கோல்கர்(Dmitry Kolker) என்பவர் வெள்ளிக்கிழமை மாஸ்கோவின் மிகக் கொடூரமான சிறைச்சாலையில் மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் அவரது குடும்பத்தினர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். லேஸர் விஞ்ஞானி டிமிட்ரி கோல்கர்(Dmitry Kolker) சமீப நாட்களாக விளாடிமிர் புடினின்(Vladimir Putin) நம்பிக்கைக்குரிய உளவுப்படையால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.
குறித்த உளவுப்படையே சித்திரவதை செய்து கொன்றுள்ளதாக விஞ்ஞானி டிமிட்ரி கோல்கர்(Dmitry Kolker)-ன் குடும்பம் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன்போது புற்றுநோயாளியான டிமிட்ரி கோல்கர்(Dmitry Kolker) மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையிலேயே உளவுப்படையால் கைதாகியுள்ளார்.
ஆனால், மருத்துவ நிர்வாகத்தின் அனுமதியுடனே டிமிட்ரி கோல்கர்(Dmitry Kolker)-ஐ கைது செய்துள்ளதாக உளவுப்படை தெரிவித்துள்ளது.