ஆப்கான் மசூதியில் மீண்டும் ஒரு மனித வெடிகுண்டு தாக்குதல்: 40 பேர் பலி!
ஆப்கானில் உள்ள மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 37 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும், 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த பின்னர், ஐஎஸ்-கரோசன் தீவிரவாத அமைப்புக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐஎஸ் அமைப்பு, குண்டுவெடிப்பு போன்ற நாசவேலைகளையும் தொடங்கி உள்ளது.
இதேவேளை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, குந்துஸ் பகுதியில் உள்ள ஷியா பிரிவினர் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். குறித்த தாக்குதலுக்கு ஐஎஸ்-கரோசன் அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், கந்தகார் மாகாணத்தில் உள்ள ஷியா பிரிவினர் மசூதி ஒன்றில் இன்று (15) வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மீண்டும் மனித வெடிகுண்டு தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. இதில், 37 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புபொறுப்பு ஏற்பதாக அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.