அமெரிக்காவில் மீண்டுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; ஒருவர் பலி
அமெரிக்காவில் வீட்டில் நடந்த கேளிக்கை விருந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் மிசோரி மகாணம் ஜெஸ்டர்பிள்ட் நகரின் ரிட்ச்மவுண்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு கேளிக்கை விருந்து நடைபெற்றது. அப்போது, அந்த விருந்து நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் , 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.
அதேவேளை அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது.