அமெரிக்காவில் மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ! பொலிஸார் உட்பட பலர் படுகாயம்
நேற்று இரவு வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
இசை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், மர்ம நபர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை கொண்டு பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.
முதற்கட்ட அறிக்கையின்படி, உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் உள்ளிட்டோர் விவரங்கள் இன்னும் முழுமையாகவெளியாவில்லை. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது காயமடைந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகப்படும் நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேவேளை அமெரிக்காவில் அண்மை காலத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை ஒடுக்க பிடன் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.