அல்பர்ட்டாவின் நில அதிர்வு இயற்கையானதல்ல!
அல்பர்ட்டா மாகாணத்தில் இடம்பெற்ற நில அதிர்வு இயற்கையானதல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
அல்பர்ட்டாவில் பதிவான பாரிய நில அதிர்வு இயற்கை காரணிகளினால் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளின் போது இவ்வாறான நில அதிர்வு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எண்ணெய் அகழ்வின் போது ஆழமான பகுதியிலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்படும் போது இவ்வாறான அதிர்வுகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிலத்தின் கீழ் மிக ஆழமான பகுதியில் துறையிட்டு கழிவு நீரை வெளியேற்றும்போது இவ்வாறான நில அதிர்வுகள் பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.