இருவரை வீட்டோடு கொளுத்த முயன்ற பெண்
நோவா ஸ்கோடியாவில் இருவரை வீட்டோடு கொளுத்த முயன்ற பெண் மீது பொலிசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நோவா ஸ்கோடியாவின் West Arichat பகுதியை சேர்ந்த 34 வயது Santana Maria Leblanc என்பவர் மீதே இரு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை சுமார் 7.45 மணியளவில் பிரதான சாலை 206கு அருகாமையில் குடியிருப்பு ஒன்று தீவிபத்தில் சிக்கியுள்ளதை அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்தின் போது அந்த குடியிருப்புக்குள் இருந்த இருவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர். ஆனால், குடியிருப்பானது மொத்தமாக எரிந்து சேதமடைந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த பொலிசார், குடியிருப்புக்கு நெருப்பு வைத்த குற்றத்திற்காக Santana Maria Leblanc என்பவரை கைது செய்துள்ளனர்.