ரஷ்யாவிடம் ஆயுத கொள்வனவு; இந்திய மீது பொருளாதார தடையா ?
இந்தியாவிற்கு பொருளாதாரத்தடை விதிக்க அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை வாங்கும் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கவா? வேண்டாமா? என்பது பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய - அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்த விவாதத்தில் ரஷியாவிடம் எஸ் 400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை இந்தியா வாங்குவது குறித்துப் பலமுறை பேசப்பட்டதாகத் தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு அதிகாரி டொனால்டு லூ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் மதிப்புமிக்க கூட்டாளியாக இந்தியா உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்து வருகிறது.
அதே நேரத்தில் அமெரிக்காவும் இந்தியா நல்லுறவை பேணி வருவது குறிப்பிடத்தக்கது.