உக்ரைனுக்கு பெருந்தொகை ஆயுதங்களை நன்கொடையாக வழங்கிய நாடு
உக்ரைனுக்கு பெருந்தொகை ஆயுதங்களை கனடா நன்கொடையாக வழங்கியுள்ளது.
ரஸ்யாவிற்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக இவ்வாறு பெருந்தொகை ஆயுதங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இவ்வாறு கனேடிய அரசாங்கத்தினால், உக்ரைனுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நன்கொடையாக வழங்கப்பட்ட ஆயுதங்களின் பெறுமதி 98 மில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் அதி நவீன பிரங்கிகளில் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள் பெருமளவில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பீரங்கிகளை இயக்குவதற்கு உக்ரைன் படையினருக்கு கனடா பயிற்சி அளித்துள்ளது.
உக்ரைனின் கிழக்கு பகுதியை பாதுகாத்துக் கொள்வதற்கு உக்ரைன் படையினர் முன்னெடுத்து வரும் போருக்கு இந்த ஆயுதங்கள் உதவியாக அமையும் என கனேடிய பாதகாப்பு அமைச்சர் அனித ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை அனுப்பி வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஆயுதங்கள் உக்ரைனை சென்றடையும் என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு கூடுதலான இராணுவ உதவிகளை வழங்குவதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.