அசாம் பொலிஸார் மீண்டும் வந்தால் அனைவரையும் கொல்வோம்.. மிசோரம் எம்.பி சர்ச்சை பேச்சு
அசாம் பொலிஸார் மீண்டும் வந்தால் அனைவரையும் கொல்வோம் என மிசோரம் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் - மிசோரம் இடையிலான எல்லைத் தகராறில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் அசாம் காவல்துறையினர் 6 பேரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் அசாம் காவல்துறையினர் 200 பேர் தங்கள் பகுதிக்குள் நுழைந்து முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர்கள் அனைவரையும் கொல்லாததால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றும், மீண்டும் அவர்கள் வந்தால் அனைவரையும் கொல்வோம் என்றும் மிசோரம் நாடாளுமன்ற உறுப்பினர் வன்லால்வேனா பேட்டியளித்தார்.
இதையடுத்து வன்முறை தொடர்பான சதியின் பின்னணியில் வன்லால்வேனா உள்ளாரா எனக் கண்டறிவதற்காக அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாக அசாம் பொலிஸார் தெரிவித்துள்ளது. இதற்காகக் காவல் தனிப்படையினர் டெல்லி விரைந்துள்ளனர்.