அல்-உதெய்த் அமெரிக்கத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முறியடிப்பு
மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல்-உதெய்த் தளத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதல் முயற்சியை கட்டார் வான்படை முறியடித்துள்ளது.
இத்தகவலை கட்டார் பாதுகாப்பு அமைச்சு இன்று (6) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகமாக இயங்கும் இந்தத் தளம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முயற்சி பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் முயற்சி இடம்பெற்ற போது, கட்டார் அரசாங்கம் அந்நாட்டு குடிமக்களின் கைபேசிகளுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கைச் செய்திகளை (Security Alerts) அனுப்பியிருந்தது.
இந்தத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வான்பரப்பு மற்றும் முக்கிய இராணுவ நிலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.