அமெரிக்காவில் இஸ்ரேலிய ஆதரவாளர்களை தீ வைத்து எரிக்க முயற்சி; சம்பவத்தால் அதிர்ச்சி
அமெரிக்காவின் கொலராடோவின் போல்டரில் இஸ்ரேலிய பணயக்கைதிகளிற்கு ஆதரவாக மக்கள் கூடியிருந்த பகுதியில் நபர் ஒருவர் தீ மூட்டி மக்களை எரிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நபர் ஒருவர் எரியக்கூடிய திரவத்தை கொண்ட போத்தல்களை வீசினார் அது தரையில் விழுந்து வெடித்ததும் தீப்பிழப்புகளாக வெடித்த நிலையில் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
சுதந்திர பாலஸ்தீனம் என கோஷம்
இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்த எவ்பிஐ அதிகாரிகள் , இது பயங்கரவாத செயல் என தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் எகிப்தை சேர்ந்த முகமது சப்ரி சொலைமான் என்ற 45 வயது நபர் எனவும் இவர் 2023 இல் விசா காலாவதியான போதிலும் தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை எரிபொருள் நிரம்பிய போத்தல்களை வீசும்போது சுதந்திர பாலஸ்தீனம் என அவர் கோஷமிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாங்கள் அந்த பகுதிக்கு சென்றபோது பலர் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர், அவர்கள் எரிகாயங்களுடன் காணப்பட்டனர் என போல்டெர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்ததாகவும் அந்த தகவ்ல்கள் கூறுகின்றன.