டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! அவுஸ்திரேலியா திட்டவட்டம்
அவுஸ்திரேலியா நாட்டில் வயது வந்த அனைவருக்கும் டிசம்பருக்குள் தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றை அவுஸ்திரேலியா வித்தியாசமாக எதிர்கொண்டது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் உலகளவில் பரவியது போது உடனடியாக நாட்டின் எல்லையை மூடியது. மாநிலங்களுக்கு இடையிலும் கடுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்தது. நாடு தழுவிய கொரோனா தொற்று என்பதை முறியடித்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியா நாட்டின் எல்லையை முற்றிலுமாக மூடிவிட்டது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முடிக்கிவிட்டுள்ளது.
வயது வந்தோருக்கு தற்போது வரை 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையான (வயதுதிற்கு வந்தோர்) 50 லட்சம் பேருக்கும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்த திட்டமிட்டுள்ளது.
ஆனால், 2022 வரை எல்லைகளை திறக்க அவுஸ்திரேலியா தயாராக இல்லை.