இதுவரை இல்லாத அளவு அவுஸ்திரேலியாவில் வேகமெடுத்துள்ள கொரோனா பரவல்
பல மாதங்களில் இல்லாத அளவுக்கு, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சிட்னி நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்று 262 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கொவிட்- 19 காரணமாக ஐந்து பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "டெல்டா வகை கொரோனாவை கட்டுப்படுத்துவது உலகம் முழுவதும் பல பகுதிகளுக்கு சவால் மிக்கதாக உள்ளது.
நாம் முயற்சி செய்து வைரஸை அழிக்க முடியும். ஆனால், பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியே முக்கிய பங்கு வகிக்கிறது" என்றார்.
இதனால், நியூகாசில் உள்பட ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.