என்னை மன்னித்து விடுங்கள்: பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட மேயர்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Rossland நகர மேயர் கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
கனடா- அமெரிக்கா என இருநாட்டு குடியுரிமையை பெற்றவர் Kathy Moore, Rossland நகர மேயரான இவரும், இவருடைய கணவனும் கொரோனா விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் வேளையில், தன்னுடைய குடும்பத்தினரை பார்க்கவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் Kathy Moore தன்னுடைய கணவருடன் அமெரிக்காவுக்கு பயணித்துள்ளார்.
இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தனது செயலுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் Kathy Moore.
அவர் கூறுகையில், மக்களால் செய்ய முடியாத ஒன்றை நான் செய்ததற்காக என் மேல் அவர்களுக்கு கோபமும், மனகசப்பும் இருக்கிறது, இதற்கான நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நான் ஒரு தாயாக, பாட்டியாக இந்த முடிவை எடுத்துவிட்டேன், ஆனால் மேயராக நான் சிந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் மேயர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து முடிவெடுத்த போதும், Rossland நகர மக்கள் மீதிருந்த நம்பிக்கையால் அந்த முடிவை கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மன்னிப்பை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்பும் Kathy Moore, மே மாதம் கனடாவுக்கு திரும்பி வரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.