ஒன்ராறியோவில் நீக்கப்பட்ட தடை!
ஒன்ராறியோவில் சனிக்கிழமை தொடக்கம் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களை சந்திப்பதற்கு உறவினர்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்.
நீண்டகாலப் பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களை வெளியில் உள்ள உறவினர்கள் நண்பர்கள் சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் தொடக்கம் இல்லங்களில் உள்ளவர்களை வெளிப்புறத்தில் உறவினர்கள் இரண்டு இரண்டு பேராகச் சந்திக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி உரிய சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த , 10 மாதங்களாக சந்திக்காமல் இருந்து குடும்ப உறுப்பினர்கள் கூட இல்லங்களில் உள்ள தமது உறவினர்களை சந்தித்து வருகின்றனர்.