நாளை பதவியை இராஜினாமா செய்யும் பசில் ராஜபக்ஷ!
இலங்கை முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்ஷ, (Basil Rajapaksa) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை வியாழக்கிழமை (09-06-2022) இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை இராஜினாமா செய்ய உள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பசில் ராஜபக்ஷ நாளை அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் அந்நாட்டு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை காலை 11 மணிக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.
இராஜினாமா செய்த பின்னர் கட்சியின் வளர்ச்சிக்காக தனது முழு நேர பங்களிப்பை ஆற்றவுள்ளதாக கூறப்படுகிறது.